குருவிரொட்டி இணைய இதழ்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை – குறள்: 429


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
– குறள்: 429

– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல அறிவுடையார்க்கு, அவர் அஞ்சி நடுங்குமாறு வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.



மு. வரதராசனார் உரை

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

This wise with watchful soul who coming ills foresee; From coming evil’s dreaded shock are free.

– Thirukkural: 429, The Possession of Knowledge, Wealth