குருவிரொட்டி இணைய இதழ்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் – குறள்: 565


அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
– குறள்: 565

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும்
இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காண விரும்பிய குடிகட்கு எளிதாய்க் காணப்படாதவனாகவும் அரிதிற் கண்டவர்க்கும் சுடுமுகத்தனாகவுமிருக்கும் அரசனின் பெருஞ்செல்வம்; பூதங் காத்தாற் போன்ற தன்மையை உடையது.



மு. வரதராசனார் உரை

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.



G.U. Pope’s Translation

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon’s glance.

 – Thirukkural: 565, Absence of Terrorism, Wealth