குருவிரொட்டி இணைய இதழ்

கோடை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

கோடை – இயற்கை – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் கவிதை

சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்
சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்
மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வை
வழிந்துகொண்டே இருக்கும் வியர்வை

நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் 
நொக்கும் வெயிலால் உருகும் இலாடம்
அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்
அழுது கொண்டே திரியும் ஆடும். 

கொட்டிய சருகு பொரித்த அப்பளம்!
கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்! 

தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!
சோலை மலர்ந்த மலரும் உலரும்.

கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!
கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!
குட்டை வறண்டது தொட்டது சுட்டது. 
கோடை மிகவும் கெட்டது கெட்டது!